Sunday, July 31, 2011

ஆன்மிக சுற்றுலா தொடர்ச்சி


திருவிடைமருதூரிலிருந்து, திருவிழி மிழலைஎன்ற ஸ்தலத்திற்கு கிளம்பினோம்.ஒருவழிசாலை வழியாகத்தான் செல்லவேண்டி இருந்தது.சாலை சுமாராகத்தான் இருந்தது அகவே மிதமானவேகத்தில் சென்றோம்.சாலையின் இருபக்கமும் கவேரிதாயின் நீண்டகரங்களை போல்,சல சல வென ஓடும் நீரோடை அதன் இருகரைகளிலும் காவேரியின் அரவணைப்பில் செழிப்பின் செழுமையாய் கான முடிந்த்தது.பூமித்தாயின் கரும்கூந்தால் போல் தார்சாலை வளைந்து நெளிந்து கிடந்தது. காவேரித்தாயின் அரவணைப்பில் செழுமையையும் பார்த்து ரசித்த நீரோடையின்சல சலப்பைகேட்டபடி, ஒரு ஒருமணிநேர பயணத்திற்கு பின் தென்கரை சிறிய கிராமத்தை அடைந்தோம் பாலத்தின் வழியே நீரோடையை கடந்து சென்றோம் தென்கரை  கரைய்லேயவது இரண்டு முனு கடைகள் இருந்தன,இந்தகரையில் கடைகளே இல்லை வீடுகள் மட்டுமே இருந்தன.கோயில் வாசலில் இறங்கும் போது மணி பண்ணிரண்டரை.கோவில் நடை சாத்தி இருந்தது.கோவிலில் அன்னதானம் வழங்கினார்கள். வேறு ஹோட்டல் ஏதும் இல்லாததால்,நாங்களும் அங்கேயோ உணவு அருந்தினோம் .தயிர் சதம்,கோயில் பிரசாதம் போல் சுவையாக இருந்தது. கோயில் நான்கு மணிக்குத்தான் திறக்கபடும் உணவு அருந்திவிட்டு சிறிது நேரம் ஒய்வு எடுத்தோம்.மூன்றை மணிக்கே எழுந்து ரெடியானோம் ஓவருவராக கோயில் உழியர்கள் வந்தனர்.இங்கேயும் முன்று மாலை தேங்காய் வாங்கவேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.நாங்கள் வழக்கம்போல் என்ங்கல் குலதெய்வம் அய்யனார் கோயிலில் மட்டும் தான் தேங்காய் உடைப்போம் என்று கூறி வாங்க மறுத்தோம்,கோயில் உழியர்கள் யாரும் வற்புறுத்தவில்லை அங்கு இருந்த மற்றவர்கள் தான்.ஒருவழியாக மாலைமாட்டும் வாங்கிகொண்டு உள்ளே செல்ல எத்தளித்தபோது ஒரு பெரியவர் கல்யாண வயது குழைந்தைகளை அழைத்து வந்து இருக்கிறிகள் தேங்காய் உடைத்து தான் ஆகவேண்டும் இல்லையென்றல் பலன் இல்லை என்று கூற எனது மருமகள் தேங்காய் வாங்கலாம் என்று கூறினால் .சரியென்று தேங்காய் மற்றும் பூஜை குரிய பொருட்கள் வாங்கிகொண்டு உள்லேசென்றோம் .கோவில் மிகவும் பழமையனகோயில் ஆயரம் ஆயிரத்தி அய்நூறு   வருடங்களுக்கு முந்தியது போல் உள்ளது நல்ல பெரியகோயில் வாசலில் ஒரு சிறிய கோபுரம்,எதிரில் ஒரு மண்டபம் அதனருகில் ஒரு சிறிய குளம்,கோபுரவாசலை கடந்த உடன் வெளிபிரகாரம் ஆரம்பிக்கிறது .வலது புறத்தில் ஒருமண்டபம்,இடது புறத்தில் தர்போதையமுரையில் கண்கிரிட்டி னால் கட்டிய இன்னொரு மண்டபம் அதில் அநேகமாக திருவிழா நேரங்களில் சொற்பொழிவு போன்ற நிகழ்சிகள் நடக்கும் இடமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.இந்தவாசலை தாண்டிசுவாமி சந்நிதி சென்றோம். சந்நித்யில் முன்னாள் சிவன் சுயம்புலிங்க வடிவிலும்.அதற்க்கு பின்புறம்,மாப்பிள்ளை சுவாமி என்கிற ஸ்ரீ கர்த்தியயினியாம்பிகை ஸ்மேத ஸ்ரீகல்யனசுந்தரமுர்த்தி.கல்யாண கோலத்தில்காட்சி அளிக்கிறார்  கர்ப்பகிரகத்திற்கு முன் மண்டபாமே திருமண மேடை என்றும் அதன் துண்களில் ஒருதுன் மட்டும் சற்று உள்ளே தள்ளி இருக்கிறது அதுதான் பந்த கால் என்றும் அர்ச்சகர் கூறினார்.அதன் வலது பக்கம் கல்யாண கோலத்தில் ஈஸ்வரனும் அம்பிகையும் பக்கத்தில் பெருமாளும்இருக்கிறார்.பெருமாள் சக்கராயுதம் வேண்டி ஆயிரம் மலர்கொண்டு பூஜை செய ஒருமலர் குறையவே  ,அதற்க்கு பதிலாக தனது விழியை எடுத்து காலடியில் வைத்து ஏற்றுகொள்ளும் படி வேண்டி நிற்பதாகவும்.வீழி என்ற முலிகை செடி அதிகம் இருந்த காரணத்தினால்  திருவிழி மிழலை என்ற பெயருக்கு காரணம் என்று  அர்ச்சகர் கூறினார்.சிவனும் அம்பாளும்,பெருமாளும் இருக்கும்இந்த இடத்தில் தான் தேங்காய் உடைக்கப்பட்டது. அர்ச்சகர் அங்கேயே சற்று தள்ளி வலதுபுறமாக சென்று உடைத்தார்.அவர் உடைத்த இடத்தில் எங்கள் குல்தேய்வம்மான,அய்யனார் பூரண புஷ்கலையுடேன் இருந்தார்.இந்த நிகழ்வு எங்கள் எண்ணப்படிஎங்கள் குலதெய்வமே ஏற்று கொண்டதுபோல் மிக மகிச்சியாக இருந்தது.அந்த மகிழ்ச்சியுடன்அம்மன சந்நிதியில் தரிசனம் முடித்து பிரகாரம் வந்து சுற்றினோம்.இந்தகோயிலில் திருநாவுக்கரசர்,ஞான சம்மந்தர் இருவரும் இறைவனிடம் படி காசு வாங்கினர்கலம்.சுந்தரர் திருபாரணம் வாங்கியதாக ஒரு கூற்று கேள்விப்பட்டோம்.அறிய பெரும் ,இறைவனின் அருளை பூரணமாக பெற்ற இந்தமுவரும் வலம்வந்த இடம் என்பதால்,இந்தபுன்னியவான்கள் பாதம் பட்ட இந்த பூமியில் நாமும் வளம் வருகிறோம் என்ற நினைப்பே எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.பிரகாரத்தில் எந்தகோவிலிலும்இல்லாத,பாதாள நந்தி உள்ளது.நந்தி மீது முழு கோயிலும் கட்டியது போல் இருக்கிறது.அதையும் தரிசித்து வெளியே வந்து திருஆலங்குடி சென்று தட்சனா மூர்த்தியை தரிசித்து ஸ்ரீவில்லிபுத்தூர்  வந்து சேர்ந்தோம்.சிவா சிவா போற்றி..இதை படிக்கும் அனைவருக்கும் நல்லாருள் புரிய இறைவனை வேண்டுகிறேன் ஈசனே போற்றி எந்தையடி போற்றி ஈசன் தள்ளாடி போற்றி,திருசிற்றம்பலம் .                                                                     

  [Image1]
 பார்வதி திருமணம்: காத்தியாயன முனிவர் என்பவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி மனைவியுடன் கடும் தவம் புரிந்தார். இவரது தவத்திற்கு மெச்சிய பார்வதி, அந்த முனிவருக்கே மகளாக பிறந்தாள்.
அக்குழந்தைக்கு கார்த்தியாயினி என்று பெயரிட்டு வளர்த்தனர். பெண்ணிற்கு திருமண வயது வந்ததும், இறைவனே கார்த்தியாயினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டினார்.
முனிவரின் வேண்டுகோளின் படி சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தில் இத்தலம் எழுந்தருளி அம்மனை திருமணம் செய்தார். அப்போது முனிவர், என்றென்றும் இதே திருமணக்கோலத்தில் இத்தலத்தில் அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டினார். அதன்படி இறைவன் மூலஸ்தானத்திலேயே திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
பெயர்க்காரணம்: ஒருகாலத்தில் இத்தலம் முழுவதும் வீழி எனப்படும் சந்தனம், செண்பகம், பலா, விளா ஆகிய மரங்கள் அடங்கிய காடுகளாக இருந்தன. மிழலைக்குறும்பர் என்ற வேடுவர் இத்தல இறைவன் மேல் கொண்ட அன்பினால் தினமும் விளாங்கனியை நைவேத்யம் செய்து வழிபட்டு வந்தார். இறைவன் அவரது அன்பிற்கு இரங்கி, அஷ்டமாசித்திகளை வழங்கினார்.
வேடுவரால் நிவேதனம் செய்யப்பட்ட விளாங்கனி வீழிநாதரின் பாதத்தில் இன்றும் காட்சியளிக்கிறது. இதனால் இத்தலம் திரு+வீழி+மிழலை என்று அழைக்கப்படுகிறது.
படிக்காசு: சம்பந்தரும், நாவுக்கரசரும் பல தலங்களை தரிசித்து விட்டு திருவீழிமிழலையில் சில காலம் தங்கினர். அப்போது பஞ்சம் ஏற்பட்டது.
இருவரும் வீழிநாதரை பணிந்து பஞ்சம் போக்க பாடினர். இருவரது கனவிலும் தோன்றிய ஈசன், தினமும் ஒரு பொற்காசு தருவதாகவும், அடியார்களின் பசி தீர்க்கும்படியும் கூறினார். அதன்படி கிழக்குப்பீடத்தில் உள்ள காசை சம்பந்தரும், மேற்குப்பீடத்திலுள்ள காசை திருநாவுக்கரசரும் எடுத்து அடியார்களிடம் கொடுத்து, அவர்கள் பசி போக்கினர்.
இப்போதும் படிக்காசு பீடம் இருக்கிறது. இங்குள்ள விநாயகர் படிக்காசு விநாயகர் எனப்படுகிறார். இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட "வவ்வால் நந்தி மண்டபம்' உள்ளது. சஷ்டியப்த பூர்த்தி திருமணங்கள் இங்கு நடத்தப்படுகின்றன.
 
   
  தல வரலாறு:
நன்றி தினமலர்  

Friday, July 29, 2011

சூரியனார் கோவிலை விட்டுவெளியா வந்த நாங்கள்.அருகில் இருந்ததிரு மங்கள குடிக்கு வந்து மங்கலாம்பிகையாய் தரிசித்துவிட்டு .அதற்க்கு அருகில் இருந்த திரு விடைமருதூர் ஈஸ்வரன் கோவில் சென்றோம். நல்ல பெரிய கோவிலாக இருந்தது.அங்கு உள்ளே நுழையும்போதே ஒரு பெண்மணி எங்களுக்கு பிரசாதம் வழங்கினார்கள்.அது எங்களுக்கு ஒரு நற்சகுன மாகவே பட்டது சந்தோஷமாகவே இருந்தது. முதல் வாசலிலேயே வரகுன்பாண்டியன் பிரமஹஷ்த்தி தோஷம் கழித்த  இடம் என்று எழுதி இருந்தது அங்கு உப்பு வாங்கி தலை சுற்றி போட்டால் தோஷங்கள் கழியும் என்பது ஐதீகம் அத்துடன் அந்த வாசலை யார் கடந்தாலும் அவர்களின் தோஷம் கழிந்துவிடும் இந்த வாசல்வழியே திரும்பவும் கடந்து வெளியே சென்றால் தோஷம் திரும்பவந்துவிடும்என்பதால் திரும்ப இந்தவாசல் வழியே யாரும் வருவதில்லை.வாசலை கடந்து உள்ளே செல்பவர்கள் ஈஸ்வரன் சந்நிதி சென்று ஈஸ்வரனை வாங்கிவிட்டு.அங்கிருந்து நேரே அம்மன் சந்நிதி வந்து அம்மனை தரிசித்துவிட்டு .அம்மன் சந்நிதி வாசல் வழியாக வந்து ,வாசலில் இருக்கும் முகாம்பிகை சந்நிதியில்முகாம்பிகையாய்தரிசித்து அருகில் இருக்கும் மேருவை வணங்கி வெளிஎவரவேண்டும் என்ற நியதிக்கு இணங்க நாங்களும் அவரே தரிசனம் முடித்து வெளியே வந்தோம் தொடரும்

Thursday, July 28, 2011

ஒரு ஆன்மிக சுற்றுலா

குடும்பத்துடன் ஒரு ஆன்மிக சுற்றுலா சென்று வர தீர்மானித்தோம்.எங்கு செல்லலாம் எண்ணுபோது குபகோணம் பகுதியில் உள்ள சிலகோயில் களுக்கு செல்லலாம் என்று முடிவு செயப்பட்டது.17.07.2011 ஞாயறு அன்று இரவு குவ்ளிஷ் வண்டி ஒன்றை அமத்தி எனது தங்கை குடும்பமும் நானும் கிளம்பினோம் இரவு பயணம் ஆனதால்,குமிருட்டில் காற்றை கிழித்து கொண்டு வண்டி பறந்தது காலை ஆறரை மணி அளவில் சூரியனார் கோவில் வந்து சேர்ந்தோம் கட்டண குளியல் இடத்தில் காலை கடன் கலை முடித்துகொண்டு கோவிலுக்கு சென்றோம் உள்ளே இருந்த யாவாரிகளும் புரோக்கார்களும்  பத்து தேங்க வாங்கவேண்டும் அப்படினா தான் அர்ச்சனை செயபடும் என்றுகூற, நாங்கள் எங்கள் குலதெய்வ கோவிலில் மட்டும்தான் தேங்க உடைப்பது வழக்கம் மற்ற கோவில்களில் அர்ச்சனை மட்டுமே செய் வோம் என்று கூறி மறுக்க.கட்டாயம் தேங்காய் வாங்க வேண்டும் வருபுருத்தினார்கள் அதனை பெரும் சேர்ந்து கொண்டு அர்ச்சனை டிகட் தரமாட்டார்கள் என்று கூறி பெரிய வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அது எதையும் பொருட்படுத்தாமல் டிகட் கவுண்டரில் நின்று அர்ச்சனை டிகட் கேட்க,மறுப்பேதும் இல்லாமல் டிகட் தந்து விட அர்ச்சனை செய்து தரிசனம் முடித்து சந்தோஷமாக வெளியே வந்தோம்.இதில் இன்னுமொரு வேடிக்கை எனவேன்றல் இந்த பத்து தேங்காயும் உடைத்து அதுதையும் வீடிற்கு கொண்டுசெல்ல கூடாது என்பதும் ,அங்கேயே தானம் செய்து விடவேண்டும்என்பதும்  அங்கு உள்ள ஐதீகம்.அதாவது அவர்களிடமே கொடுத்து விடவேண்டும் இதற்க்கு தான் இதனை பாடும்.இதற்காக அங்கு வருவோரிடம் எல்லாம் இப்படித்தான் செய்யவேண்டும் இல்லாவிட்டால் பலன்கிடைக்காது என்று அவர்களின் மனதை காயபடுத்தி இதை பெறுகிறார்கள் அனால் அது பாவம் என்று தெரியவில்லை.அத்துடன் புனியஸ்தலத்தை யவாரஸ்தலம் ஆக்கி விடுகிறார்கள் இதை நினைக்கும் பொது மனசு மிகவும் கஷ்ட்டப்படுகிறது.                                              தொடரும்