Wednesday, March 27, 2013

ஸ்ரீ ஆண்டாள் திருமணம்- ஸ்ரீவில்லிபுத்தூரில்

இன்று ஸ்ரீ ஆண்டாள் திருமணம் நடக்கிறது .கோதை ஆண்டாள் பிறந்த,வளர்ந்த, தவழ்ந்த,விளையாடிய ,இந்த மண்ணில் பிறந்ததே நாம்செய்த புண்ணியம் .இந்தமண்ணில் நடக்கும் பொது அந்த அம்மையின் காலடி பட்ட துசியது என்மீது படாத என்று ஏங்கியது உண்டு அப்படிப்பட்ட அந்த அம்மையின் திருமணம் இன்று நடக்கிறது .அந்த அம்மா தன்திருமணம் எப்படி நடக்கவேண்டும்  என்பதைஅந்த காலத்தில் பாடலாக எழுதியுள்ளார் அதான் ஒருபகுதியை பார்ப்போம் .
 1.வாரணமாயிரம் சூழ வலம்செய்து ,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரணபொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நட்டக் கனாக்கண்டேன் தோழி நான்.
  கொஞ்ச காலம் முன் வரை கூ டமாப்பிள்ளை அழைப்பில் கோவில் யானை
ஊர்வலத்தில் முன்னே செல்ல வைக்கும் பழக்கம்இருந்தது சாட்சாத் மஹா விஷ்ணுவே மாப்பிளையனால் ஒரு யானை போதுமா என்ன ?வாரணம் ஆயிரம் சூழ மாப்பிளை ஊர்வலம் வந்தாராம் நம்பி என்றல் ஆடவரில் சிறந்தவர் என்றுஅர்த்தம் அவன் வரும்போது எதிரே பூரண பொற் கலசங்கள்வைத்து வாயிற் புறமெங்கும் தோரணங்கள் கட்டப் பெற்றிருப்பதைக் கண்டேன் என்கிறாள் கோதை ஆண்டாள் .

2. நாளை வதுவை மணமென்று நாளிட்டு ,
பாளை கழுகுபரிசுடைப் பந்தற்கிழ்,
 கோளரி மாதவன் கோவிந்தனேன்டான் ,ஓர்
காளைபுகுதக்  கனாக்கண்டேன் தோழி நான்

 இது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது தென்னம் பாளையும் பாக்கு கொத்துகள் கட்டப்பட்ட பந்தலில் சிங்கம் போன்று மாதவன் மறுநாள் கல்யாணம் என்று வந்தாராம்

3இந்திரனுள்ளிட்ட தேவர் சூழா மெல்லாம் ,
வந்திருந்த்தென்னை  மகட் பேசி மந்திரித்து ,
மந்திர்க்கோடியுடுத்தி மணமாலை ,
அந்தரி சூட்டக்  கனாக்கண்டேன் தோழி நான்.

திருமாலின் ஊரவினர்கள் இந்திரன் உள்ளிட்ட தேவர் கூட்டம்வந்திருக்க தங்கை பார்வதி சூட்டிவிட்டாள்என்கிறாள் கோதை .

தொடரும் ;
  •   

.
  1.   
 .