Monday, February 3, 2014

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.-அருள்மிகு கொல்லங் கொண்டான்கரையடி காத்த ஐயனார் திருக்கோவில்

       அருள் மிகு கொல்லங் கொண்டான் கரையடி       காத்த ஐயனார் திருக்கோவில்.   

                 ஓம் பூதநாதாய வித்மஹே;  பாவ புத்ராய தீ மஹே;  
                  தன்னோ சாஸ்தா  பிரசோதயாத் !

                              சமஸ்தாப  தார  சர்வாஸ்ட   நாசக
                              சர்வா  பீஷ்ட  தாயக   சர்வ   மங்கள
                              ஸ்வரூபி பாண்டி மலையாளம் காசி
                              இராமேஸ்வரம்   அடக்கி   ஆளும்
                              ஸ்ரீ  பூரண   புஸ்கலாம்பாள்
                              சமேத அரிகரசுதன் ஆனந்த சித்தன்
                              என்  அய்யன் ஐயனாரப்பனே  சரணம் ;

தோற்றம் ; 

  ஆயிரம் வருடங்களுக்கு  முற்பட்ட மிகவும் பழமையான கோவில் .இது. ஸ்ரீவில்லிபுத்தூர்,வ. புதுப்பட்டி, கோபலாபுரம், மதுரை, நான்கு ஊர் செங்குந்தர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்.  60; 70 செங்குந்த நெசவாள குடும்பங்களுக்கு குலதெய்வம். பல வருடங்களுக்கு  முன்பு  பலத்த மழை பெய்தது அதில் கரை உடையும் நிலைக்கு வந்தது கிராமத்தை விட்டு தள்ளி இருப்பதால் கரை உடையும் நிலையில் இருப்பதை யாரும் அறியவில்லை அய்யனார் மனித உருவில் சென்று  கரை உடையபோகிறது என்று கிராம மக்களை அழைத்து வந்து மணல் மூட்டைகளை  போட்டு கரையை உடையாமல் காத்தபடியால்  ( இது போல் சமிபத்தில் சுமார் பதினைந்து  வருடங்களுக்கு முன்பும் நடந்துள்ளது ) கரையடி  காத்த அய்யனார் என்றும், கரையின் மூலை பகுதியில் இருப்பதாலும்; கரையின் மூலமான மதகுக்கு அருகில் இருப்பதாலும்  மூலகரை அய்யனார் என்றும் பூரணை,  புஷ்கலா  தேவியருடன் இருப்பதால், பூரணை , புஷ்கலை உடனுறை அய்யனார் கோவில்  என்றும்   வழங்கபடுகிறது.   

கோவில் அமைந்துள்ள இடம்; 

  இது ராஜபாளையம் தளவாய்புரம் சாலையில் இருந்து கூனங்குளம் , நக்கநேரி செல்லும் சாலையில் ஜாமீன் கொல்லங் கொண்டான் என்ற  கிராமத்திற்கு அருகில் உள்ள அயன்கொல்லங் கொண்டான் என்ற கிராமத்திற்கு மிக அருகில் உள்ள கண்மாய் கரையில் இந்த கோவில் உள்ளது.
இந்த கண்மாய் கரை ராஜபாளையம், செங்கோட்டை நெடுஞ்சாலையில், தளவாய்புரம் செல்லும் சாலை பிரியும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் முன்னதாகவே ஆரம்பித்து சிறிது கிழக்காக வளைந்து சுமார் ஐந்து ஆறு கிலோ மீட்டர் சென்று ,சிறிது மேற்காக திரும்பிய பின்  ஒரு இருபது அடி  தூரத்தில் இந்த கோவில் உள்ளது . அயன் கொல்லங் கொண்டான் என்ற கிராமத்தின் பெயரில் அயன் என்ற வார்த்தை அருகில் உள்ள அய்யனார்  கோவிலை குறிப்பதாக தெரிகிறது .

கோவிலின் அமைப்பு ;


இந்த கோவில் சுமார் 67 அடி நீளமும் 33 அடி அகலத்துடன் கூடிய  10அடி உயர சுற்று சுவருடன், முன்பகுதியில் 30 அடி அகலத்துடன் ஒரு மூன்றடி உயர திண்ணை உள்ளது . திண்ணைக்கு அருகில் வடக்கு பக்கமாக, கோவிலின் ஸ்தல விருட்சம் போல் ஒரு பெரிய ஆலமரம் உள்ளது


 [ திருப்பணி நடைபெறும் போது இரண்டு முன்று கிளைகளை வெட்டவேண்டி வந்தது சற்று சிறிதாக உள்ளது .] திண்ணையில் படிகள் ஏறி  உள்ளே நுழைந்ததும் வடபுறத்தில்
  ஸ்ரீ சங்கரேஸ்வரி என்ற குழந்தை தெய்வத்தின் பீடம் உள்ளது ,அதற்கு சற்று பின்புறம் சுவற்றை ஒட்டி ஸ்ரீ நல்லசிவம்  என்ற தெய்வத்தின்  பீடமும் ,அடுத்து ஸ்ரீ சின்னகருப்பசாமி பீடமும், அருகில் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி பீடமும்  அருகில் ஸ்ரீஅக்கினி வீரபத்திரன் பீடமும் அடுத்து ஸ்ரீ கம்பளத்தார் பீடமும், ஸ்ரீ குருநாதர் பீடமும் அதன் அருகில் கீழ்
திசை பார்த்தாற் போல் ஸ்ரீசன்னாசி    பீடமும் உள்ளது, அதிலிருந்து ஒரு நான்கு அடி தூரத்தில் ஐந்துக்கு ஐந்து சதுரத்தில்  நான்கு அடி உயரத்தில் கற்களிலான   பீடத்தில், பூரணை, புஷ்கலை உடனுறை   ஸ்ரீ அய்யனார்  சிறிய  கற்சிலை உள்ளது.  எதிரில்.அதேபோல் ஒரு சிறிய பீடத்தில் குதிரை யானை நாகர் சிலை களும் உள்ளது .[ பொதுவாக அய்யனார் கோவில் என்றால் பெரிய அய்யனார் சிலையும் பெரிய குதிரை சிலையும் நம் கண் முன்னே  வரும் ஆனால், இந்த கோவிலில் அப்படி இல்லை .அதேபோல் இங்கு ஆடு கோழி பலியிடுவது இல்லை   சுத்த சைவ கோவில் ] அய்யனார்  பீடத்தை அடுத்து  ஸ்ரீ
கோவிந்தன் பீடமும் அடுத்து சுவரை ஒட்டி வடக்கே பார்த்த மாதிரி ஸ்ரீ இருளப்ப சுவாமி பீடமும் அடுத்து மாரியம்மன் பீடமும் அடுத்து ஸ்ரீ  ரண காளி பீடமும் அடுத்து ஸ்ரீ பேச்சியம்மன் பீடமும் அடுத்து ஸ்ரீ ராக்காச்சியம்மன் பீடமும் அடுத்து ஸ்ரீசப்தகன்னிமார்கள் பீடமும் உள்ளது. அடுத்து சுவற்றில் இருந்து ஆரம்பித்து கோவிலின் மத்தி வரை ஒரு பாறை உள்ளது .அதை அடுத்தாற்போல் காவல் தெய்வமான
ஸ்ரீ சின்னத்தம்பி பீடமும் உள்ளது.

என்னுடைய சிறிய வயதில் இந்த கோவில் இரண்டு அடி உயர  சுற்று சுவருடன் சிரிய சிமண்ட்டிலனா பீடத்தில் அய்யனார் சிலை இருந்தது


                                      இரண்டு அடி சுவராக இருந்த போது
சிறிய பீடத்தில் அய்யனார் 

                     
           28-10-2000-வருடத்தில் திரு ராசையா  அவர்களால் தினத்தந்தியில் எழுதப்பட்ட பதிவு .           
  என்னுடைய சிறியவயதில் இந்த கோவில் இரண்டு அடிஉயர  சுற்று சுவருடன் சிறிய சிமண்ட்டிலானா பீடத்தில் அய்யனார் சிலை இருந்தது .அதன்பின் சிறிது சிறிதாக வரி போட்டு, இன்று பத்தடி உயர சுற்று சுவருடன், நான்கு அடி உயர கற்களினால் பீடத்தில் இருக்கிறது .இந்த அளவிற்கு உருவாக்கவே எங்களுக்கு இவ்வளவு நாள் ஆகியுள்ளது எனெனில் பத்து, பன்னிரண்டு குடும்பங்களை தவிர  மற்றவர்கள் மிகவும் பின்தங்கிய நெசவாளர் குடும்பங்கள். .இப்போது எங்களில் ஓன்று, இரண்டு குடும்பங்களின் வாரிசுகள் நல்ல படிப்பு படித்து நல்ல வேலையில் இருப்பதால், அந்த இளம் தலைமுறையினர் கொடுத்த நன்கொடை மற்றும் பத்து வருடங்களாக வசுலிக்கப்பட்ட கட்டிட வரி [500ரூபாய் ] ஆகியவற்றின் மூலம் வந்த நிதியை வைத்து மேல் தளமும் கீழ் தளமும்  போட முடிவெடுத்து,  சென்ட்ரிங் போடுபவரை அணுகிய போது, மேல் சென்ட்ரிங்   போடுவதற்கே  நிதி பத்தாது என்று தெரிய வந்தது, சரி தகரத்தில் மேல் கூரை போட்டு தரை  தளம் அமைக்கலாம்,

போதாதற்கு நன்கொடை வசூல் செய்யலாம் என்று முடிவெடுத்து .திருப்பணியும்  நடை பெற்றது .நன்கொடை வசுலும் செய்யப்பட்டது, இருந்தாலும் மேல் கூரை அமைக்க மட்டுமே முடிந்தது தரை தளம் அமைக்க முடியவில்லை .இந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்த நிதி பத்தாது என்பதால் கணபதி ஹோமம் செய்ய முடிவு செய்து 20-1-2014ம் நாள் திங்கள் கிழமை [தை 7ம் தேதி ] நடைபெறுகிறது .

கோவிலில் நடை பெறும் பூஜை ;

 இந்தகோவிலில்   வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த கோவிலில் பூஜை நடைபெறுகிறது.அதேபோல் இந்தகோவிலில் பரம்பரை பரம்பரையாக ,  பூசாரியாக ஒரே குடும்பத்திலுள்ள வாரிசு தேர்ந்தேடுக்கபடுகிறார்.
       தற்போது பூசாரியாக இருப்பவர்  தி.ராஜேந்திரன் அவர்கள்.ph .9443861571.

வருடாவருடம்  மஹாசிவராத்திரி  அன்று ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, புதுப்பட்டி, கோபலாபுரம், மற்றும் ராஜபாளையம் ஊர்களில் இருந்து எங்கள் எல்லா  சொந்தமும் கோவிலுக்கு வருவார்கள் .இரவில் தான் பூஜைக்கான வேலை ஆரம்பம் ஆகும் முதலில்  அய்யனாருக்கு   பால் நெய் தயிர்  மற்றும்  சகலவிதமான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும் அடுத்து அலங்கார பூஜை நடைபெரும்.அடுத்து ஒருசிலருக்கு சாமி வரும் அப்படி சாமி ஆடும்மருளாடிகள்நாக்கில் கற்பூரத்தை  ஏற்றுவர்.  அது அவருடை வாய்க்குள் நாக்கில் எரியும் போது தீயானது  கூம்பு போன்ற வடிவில் அவருடைய அன்னத்தை தொட்டும், புகையானது வாய் வழியாக வரும் .அத்தோடு  கன்னங்களின் வழியாக சிவப்பாக வெளிச்சம் தெரியும் பார்ப்பதற்கு  பயத்தையும் ,பக்தியையும் வரவழைப்பதாக இருக்கும்  .இந்த நிகழ்வு வேறு எந்த கோவிலிலும் நடை பெறாத ஒரு நிகழ்வு;. சின்னத்தம்பி என்ற தெய்வமான காவல் தெய்வத்தின்  மருளாடி , சிறிது கட்டையான மாநிறம் உடையவர் அவர் அடும் போது , கண்களை விரிய திறந்து முழிகளை உருட்டி, ஒரு காலை முட்டிபோட்டு மறுகாலை சிறிது முன் முன்புறமாக பாதத்தை ஊன்றி, கையில் உள்ள அரிவாளை தரையில் ஊன்றி மறுகையில் வள்ளயகம்பை பிடித்தபடி குரல் கொடுத்தபடி ஆடுவது சின்னத்தம்பி நேரில் வந்தால் இப்படித்தான் இருக்குமோ என்று சொல்லும்படி இருக்கும்.அப்படி உக்கார்ந்த நிலையில் பார்க்க சிறுவர்கள் பயந்தே விடுவார்கள் . சில சமயம் அவர் கோவிலை விட்டு வெளியே சென்று பாம்பை கையில் பிடித்து வருவதும் உண்டு. சிறிது நேரத்தில்  புதிதாக வாங்கிய மண் பானையுடன் அருகில் உள்ள நீரோடையில் சென்று ,அந்த பானை சுத்தம் செய்யப்பட்டு நீர் நிரப்பி மாவிலை மற்றும் வேப்பிலை வைத்து அதன் நடுவில் தேங்காய் வைக்கப்பட்டு இலைகளை சேர்த்து கூம்பு போன்ற வடிவில் பூவினால் அலங்கரிக்கப்பட்டு பூஜை நடைபெறும்.  அலங்கரிக்கப்பட்ட கிரகத்தை இருளப்பசாமி ஆடுபவர்  தலையில் வைத்து எடுத்து வந்து இருளப்பசாமி பீடத்துக்கு அருகில் உள்ள பீடத்தில் வைக்கப்படும் [எல்லா தெய்வங்களும் இப்போது முதல் இந்த கிரகத்தில் இருந்து  இங்க உள்ள  எல்லா மக்களை காக்க வேண்டும் என்பது ஒரு ஐதீகம்]   அடுத்து வந்தவர்கள் எல்லோருக்கும்  அன்னதானம் வழங்கப்படும் .அடுத்து  எல்லா பீடத்திலும்அவித்த தட்டை பயறு, தேங்காய், பழம் கரும்பு ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்படும் .இத்துடன் அன்றைய பூஜை முடிவடையும்.
                     மறுநாள் . காலை எழுந்து ஒரு சிலரை தவிர எல்லோரும் கிளம்பி தளவாய்புரத்திற்கு பழங்கதைகளை பற்றி பேசிக்கொண்டும்,  முறமை காரர்களை கிண்டல் கேலி செய்து கொண்டு முதல்நாள்  படைத்த தட்டை பயறை சாப்பிட்டுக் கொண்டு  நடந்தே செல்வோம். .தளவாய்புரத்தில் உணவகங்களில், காலை உணவை முடித்துக் கொண்டு கோவிலுக்கு வரும் வழியில், காலை கடன்களை முடித்து; பம்ப்செட்டுகளில் ஒருவருக்கு ஒருவர் தண்ணீரை தெளித்து விளையாடி கொண்டும் குளிப்போம், நீந்த தெரிந்தவர்கள் கிணற்றில் குதித்து நீச்சல் அடித்து குளிப்பதும் உண்டு இவ்வாறு சந்தோஷமாக குளித்துவிட்டு கோவிலுக்கு வருவார்கள்.(இந்த நிகழ்வு என்னுடைய சிறுவயதில் நடந்தது) இப்போது கோவிலேயே உணவு வழங்குவதால் தளவாய்புரம் செல்வது குறைவு . முடிக்காணிக்கை செலுத்துவோர் ,காது குத்துவோர்  ஆலமரத்தின்   அடியில் அமர்ந்து காணிக்கைகளை செலுத்துவார்கள் .பதினொன்று பனிரண்டு மணி வாக்கில் முதல் நாள் போல் இன்றும் பால் தயிர் நெய் மற்றும் சகலவிதமான வாசனை திரவியங்கள்  கொண்டு அபிஷேகம்  நடைபெறும். அடுத்து அலங்கார பூஜை நடைபெறும். பின்பு அய்யனாருக்கு எதிரில் ஒரே பெரிய பானையில் பொங்கல் வைக்கப்படும்.

பின்பு பொங்கல் கரும்பு தேங்காய் பழம் வைத்து பூஜை நடைபெறும்.அடுத்து வந்தவர்கள் அனைவருக்கும் அன்னதானம்  நடைபெறும் .இவை முடிய இரவு எட்டு ,ஒன்பது மணி ஆகிவிடும் சில நேரங்களில் பத்து பதினொன்றுக்கு மேல் ஆவதும் உண்டு .  [ என் சிறு வயதில் இரவே அலங்காரம் கலைத்து கிரகத்தை எடுத்து நீரோடைக்கு கொண்டு வந்து அதற்கு பூஜை செய்து அதை கலைத்து விட்டு பூவுடன் சேர்த்து தண்ணீர் , கோவிலின் உள்ளே தெளித்துவிட்டு மக்கள் மீதும் தெளித்து விடுவார்கள் இதையே பூந்தண்ணி கொடுத்தல் எனப்படும் பூந்தண்ணி  தெளித்தவுடன்  அப்படியே கரை வழியாக நடந்து செங்கோட்டை ராஜபாளையம் சாலைக்கு வந்து ராஜபாளயத்திற்க்கு அருகில் இளந்தோப்பில்  தங்குவார்கள்..மறுநாள் காலையில் பொதுவில் படைக்க ப்பட்ட பிரஷாதங்களை  வரி செலுத்திய அனைவருக்கும் சமமாக பிரித்து கொடுத்துவிட்டு அய்யனாரின் அருளோடு சொந்தபந்தங்களை பார்த்த சந்தோஷத்தோடு வீடு திரும்புவோம் எம் மக்கள் இந்த சந்தோஷத்திற்க்காகவே  எங்கிருந்தாலும்  இந்த மூன்று நாளை தவற விடுவதே இல்லை]  , இப்போது தங்குவதற்கு இடம் இல்லை என்பதாலும் இரவில் குழந்தை குட்டிகளை அழைத்துக்கு கொண்டு பயணிப்பது சிரமமாக உள்ளதாலும் ,இரவு கோவிலில் தங்கி மறுநாள் காலை பூந்தண்ணி  கொடுத்து கிளம்புவோம், சிறிது தூரம் நடந்து வந்து பின் பேருந்து அல்லது வண்டி கார் போன்றவற்றில் ஏறி ராஜபாளையத்தில் மாரியம்மன் கோவிலுக்கு வந்து விடுவார்கள் அங்கு பிரசாதம் பிரித்து அய்யனின் அருள் பெற்ற நிறைவோடு சொந்த பந்தங்களை பார்த்த  சந்தோஷத்தோடு வீடு திரும்புவோம் .இதோடு அடுத்த வருடம்தான் இந்த் சந்தோஷம் கிட்டும் .

கோவிலின் சிறப்பு ;

1, இந்தகோவிலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பொங்கல் வைக்கப்படுகிறது அதுவும் எல்லோருக்கும் பொதுவாக  பொது  பானையாக   
ஒரே பானையில் மட்டுமே வைக்கப்படுகிறது. தனியாக யாரும் வைப்பதும்  இல்லை.
2; இந்தகோவிலில் முடி எடுப்பதும் வருடத்தில் ஒருமுறை சிவராத்திரிக்கு மறுநாள் மட்டுமே வேறு எப்போதும் கிடையாது.
 3, இந்த கோவிலில்மருளாடிகள்  நாக்கில் கற்பூரம் ஏற்றுவது சிறப்பு .வேறு கோவில்களில் இல்லாத நிகழ்வு .

காலங் காலமாய் வந்த வாய்மொழி செய்திகள்;

 1,அதாவது எங்கள் கோவிலுக்கு அருகில் தென்புரத்தில் அங்கள பரமேஸ்வரி கோவில் உள்ளது சுமார் ஆறனுற்று ஐம்பது வருடங்களுக்கு  முன்பு  ஸ்தாபிக்கப்பட்டது .இந்த அம்மன் இவர்களுடன் தங்கி கொள்ள அனுமதி   கேட்க  அய்யனார் எதிர்கரையில் அமர்ந்து அங்கு வரும் மக்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்குமாறு  பணித்ததாக இந்த கோவிலின் ஸ்தல வரலாறு கூறுகிறது .எழுத்தாளர் கொல்லங் கொண்டான் ராசையா  அவர்கள் இது பற்றி ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார் .
2, சப்பாணி முத்தையா என்ற தெய்வம் ஒரு விளையாட்டு பிரியர் ,அவர் ஒருமுறைவிளையாட வெளியில் செல்ல அனுமதி கேட்க;அய்யன்  விடியுமுன் இங்கு வந்த விடவேண்டும் என்று சொல்லி அனுமதிக்க, ஆனால்விடியுமுன் வரமுடியாதலல் அம்மன் கோவிலிலேயே தங்கி விடுகிறார் .இப்போதும் அந்த தெய்வம் அங்கு உள்ளது .
  3, சேத்தூர் என்ற ஊரில் ஒரு அய்யனார் கோவில் உள்ளது .அந்த கோவில், இந்த கோவிலின் பிடிமண் எடுத்து உருவாக்கப்பட்டதாக அந்த கோவிலின் ஸ்தல வரலாறு கூறுகிறது .

 அய்யனின் மகிமை ;

          மக்களுக்கு ஆற்றிய அற்புதங்கள் நிறையவே உள்ளது அதில் இரண்டு மற்றும் சமீபத்தில் நடந்தது .அருகில் உள்ள வயல்களில் வேலைக்கு கிராமத்து மக்கள் கோவிலின் அருகில் உள்ள ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து உணவு உண்பதும் இளைப்பாருவதும், வழக்கம் .அதுபோல் இளைப்பாறும் போது ஒரு சகோதரியின் தங்க செயின் காணவில்லை அங்கு தேடிப்பார்த்தும் கிடைக்காமல் போக அந்த சகோதரி வருத்தத்துடன் வீட்டிற்க்கு சென்றுவிட அன்று இரவு கணவில் அய்யனார் தோன்றி செயின் கிடக்கும் இடத்தை கூறி மறைய, மறுநாள் அய்யனார் கூறிய இடத்தில் செயின் கிடந்து எடுத்து நன்றி தெரிவித்துள்ளார் .இது போன்று பல அற்புதங்கள் நடந்துள்ளாதால் அந்த  கிராமத்து மக்களிடம் பயமும் பக்தியும் அதிகம். மழை பொழிவு இல்லாத காலங்களில் மழை வேண்டி பூஜைகள் நடத்துவதும் உண்டு 

             மக்களுக்கு உதவி செய்வதுடன் தண்டிக்க வேண்டியதில் தவறியதும் இல்லை ஒருமுறை கோவிலுக்கு சென்ற நேரத்தில் என்னுடைய தாத்தா  திடீ ரென்று நாக்கு வெளியே தள்ளி உணர்வின்றி கிழே விழுந்துவிட தண்ணீர் தெளித்தும் எழவில்லை எனவே  வந்தவர்கள் அனைவரும் வருத்தத்துடன் தவிக்க, சாமி ஆடுபவர் மீது சாமிவருத்தி, சாமி வந்ததும்,  இவன் பேச்சில் தவறு செய்துவிட்டான்  அதனால் தண்டித்து விட்டாதாக கூற, எல்லோரும் காலில் விழுந்து மன்னிக்குமாறு கூற, வேண்டுதலுக்கு இறங்கி, சாமி ஆடுபவர் தனது நாக்கில் தன் கையில் உள்ள அறிவாளால் கொத்தி வந்த ரத்தத்துளிகள்.எங்க தாத்தா  மீது தெளிக்க, ரத்தத் துளிகள் முகத்தில் பட்டவுடன் அவருக்கு சுய உணர்வு வந்தது.எல்லோருக்கும் மிகவும் சந்தோசம் ஏற்பட்டது .சாமி ஆடுபவர் அறிவாளால் கொத்திய இடத்தில் உள்ள காயத்திற்கு  திருநீறு மட்டுமே மருந்தாக போடப்பட்டது .