Saturday, December 22, 2012

அறுபுதமான தாரமங்கலம்கோவில் கட்டிய கோட்டை முதலியார்



தாரமங்கலம் கோவில் சிற்பங்கள்



சேலம் அருகிலுள்ள தாரமங்கலம் கைலாஸநாதர் திருக்கோவிலுக்கு சமீபத்தில் பௌர்ணமி அன்று சென்றுவந்தோம். அவ்வப்போது சுற்றிலும் கையூட்டு நிமித்தம் கேமிரா கையை யாராவது பிடிக்கிறார்களா என்று நோட்டம்விட்டபடியே கைக்கேமிராவில் க்ளிக்கிய உலகப்பிரசித்திபெற்ற கோவில் சிற்பங்கள் கீழே தொகுப்பாய் கொடுத்துள்ளேன். என்சாய்.
சிறுபடங்களை கர்ஸரால் க்ளிக்கினால் பெரிதாகும். ஸ்லைட்ஷோவாகவும் பார்க்கலாம்.  கவனிக்கவும், மூன்று பக்கங்கள் உள்ளது (மொத்தம் 47 படங்கள்). செய்தியோடையில் படிப்போருக்கு படங்கள் தெரியாவிடின் தளத்திற்கு ஒரு எட்டு வந்துபோகவும்.
உபரி விஷயங்கள் படங்களின் தொகுப்பிற்கு கீழே.
[nggallery id=2]
கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால், புதிப்பிக்கப்படும் கோபுரம் மறைக்கப்பட்டுள்ளது.
கோவில் தளம்
மொத்தமும் ஊரிலிருந்து
12 அடி கீழே அமைந்துள்ளது. 6-7 கீழே அமைந்துள்ளது. மேலும் கோவிலின் பிரதான வாயிலான மேற்கு வாயில் சற்று மேடான பகுதியிலும் கிழக்கு வாயில் சமதளத்திலும் அமைந்துள்ளது. [கீழே பின்னூட்டத்தில் சரியான தகவல் கொடுத்துள்ள siddhadreams க்கு நன்றி]
யானையின் மதகை பதம்பார்க்கும் ஈட்டி முனைகள் கொண்ட பிருமாண்ட வாயிற்கதவுகள், தமிழ்நாட்டில் வேறு இடங்களில் அமைந்துள்ளதுபோலவே, போர்காலங்களில் மக்கள் பாதுகாப்பிற்கு கோவில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதை உணர்த்துகிறது.
கோவில் கேட்டைய முதலியார் என்ற சிற்றரசன் கட்டியதாக கூறப்படுகிறது.
கோவில் சிற்பவேலைப்பாடுகளின் நேர்த்திவகைகளும்,  மன்மதன், ரதி சிற்பங்கள், சிவாலயத்தில் காணப்படும் விஷ்ணுவின் தசாவதார சிற்பங்கள், ராமர், வாலி, சுக்ரீவன் ராமாயண சிற்பங்கள், கோவில் நாயக்கர் காலத்தியதோ என்று எண்ணவைக்கிறது. பல வருடங்களாய் அடுத்தடுத்து ஆண்டவர்களின் தாக்கம் நிச்சயம் இருந்திருக்கவேண்டும்.
கோவில் பிரதான வாயில் பிரகாரமே மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கலியாணவைபவ பந்தல் போன்று செதுக்கப்பட்டுள்ளது அபாரம்.
வருடத்தில் இரண்டு தினங்கள் மட்டும் கிழக்கிலிருந்து வாயில்வழியாக த்வஜஸ்தம்பம் மேலிருக்கும் நந்தியின் மேல்வழியாக சூரியஒளிக்கற்றை பாய்ந்து கோவில் கருவறையிலிருக்கும் சிவலிங்கத்தின்மேல் விழுமாம். தமிழ்நாட்டில் பல கோவில்களில் நாம் சந்திக்கும் கட்டடக்கலையின் சாமர்த்தியம்.
பொக்கிஷங்களை திறம்பட பாதுகாக்கும் நம் மக்களின் மேலான கலாச்சாரத்திலிருந்து வழுவாமல் சிலைகளின்மேல் மஞ்சள்காப்பு இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் என்று பல உதாசீனங்களும் நிதர்சனம்.
அதேபோல், படம்பிடித்து நான்கு பேரிடம் காட்டி, அவர்களையும் கோவிலுக்கு வரவழைத்தால், வருவாய்க்கும், ஆஸ்திக ஞான மரபிற்கும் கேடாம். கேமிராவையோ கையூட்டையோ பிடுங்கிக்கொள்கிறர்கள் (பிறகு மட்டும் ஓகேவா?). சிற்பங்களின் மேல் கால்வைத்து நிற்பவர்களையும், அலேக்காக சிலைகளையே திருடிக்கொண்டு போவோர்களையும் தடுக்கவோ கண்டுபிடிக்கவோ முனைவதில்லை. பட்டாங்கில் உள்ள படி.
வாயில் உருளும் கல் உருண்டை அடக்கிய யாளி, மன்மதன் ரதி சிற்ப நேர்த்தி, வாலி வதம் சிற்ப சாமர்த்யம் (ராமருக்கு தெரியும் வாலிக்கு ராமரை தெரியாது!), என்று ஒவ்வொரு சிற்பத்திலும், சுவரிலும், கூரையிலும் பல ஆராய்ச்சி விஷயங்களை விவாதிக்கலாம். செய்வதாயில்லை.
வேறு தருணத்தில் ஆங்கிலேய அகதெமிக் (Prof. MIT, USA) ஒருவர் இந்தியாவைப்பற்றி உளறினார் என்பதற்காக நிஜ இந்தியா பற்றி ஒரு சாம்பிளுக்காக Invisible India என்று குடவாயிற்கோவில் வாயிலில் நின்றிருந்த யானையை இந்திய பாரம்பர்யம் பிளிர, சே, மிளிர ஆங்கிலத்தில் விளக்கப்போய், நண்பர்கள் இணையத்தில் என்னை ஓட்டிய ஓட்டலின் புழுதி இன்னமும் அடங்கவில்லை. அதான், நோ ஆராய்ச்சி.
தாரமங்கலம் கோவில் பற்றி வரலாறு, உபயோகமான தகவல்கள் கொடுத்தால் இப்பதிவில் இணைக்கிறேன். நன்றி.


நன்றி :-அருண் நரசிம்மன் 

Friday, October 19, 2012

     நான் சமீபத்தில் அலுவலக விஷயமாக வனஜா என்பவரை சந்தித்தேன் .
பெங்களூரின் மிக மிக பாஷ்  லொகலிட்டியில் இருந்தது அந்த பங்களா நான் சென்றபோது காலை ஒன்பது மணி இருக்கும்   வனஜா வந்திருக்கவில்லை .வீட்டின் காவலாளி கேட்டை திறந்து  உள்ளே ஹாலில் உக்கார வைத்தார் பல லகரங்களை விழுங்கிய இன்டீரியர்ஸ் ...சகல    செளகரியங்களும் நிறைந்த வீடு. சற்று நேரத்துக்கெல்லாம் சமையல்காரம்மாள் வந்து தேநீர் கோப்பையை வைத்துவிட்டுப் போனார் டீ  யை எடுத்துக் குடிப்பதற்குள் எங்கிருந்தோ ஓடிவந்த புஷு புஷு பூனைகள் இரண்டு பச்சை பளிங்குக்   கண்கள் மின்ன அசாதாரண சைஸில் மிரட்டின .வால்கள் புஷ்டியாக நீண்டு அழகாக இருந்தன அதில்.அது என்னை அலட்சியப் பார்வை பார்த்துவிட்டு ஷோப மிதுஉட்கார்ந்து கொண்டது .அதற்குள் வனஜா வந்து விட்டார் வந்த வேலை முடிந்தது வீட்டைச் சுற்றிக்க்காண்பித்தார் .ஹால் ரூம் எல்லா இடங்களிலும் மகன்-மருமகள் பேத்தி படங்கள் பேரன் பேத்தி அனுப்பிய வாழ்த்து அட்டைகள் .பரிசுப் பொருள்கள் போன்றவை அலங்காரமாக இடம்பெற்று இருந்தன "உங்கள் மகன்-மருமகள் வேலைக்குப் போயிருக்காங் களாம்மா?''
மகன் யு.கே ல வேலை செய்றான்மருமகள் பெங்களூரில் தான் இருந்தா. இப்ப ஒரு ப்ரஜெக்டுக்காக ஆஸ்திரேலியாவுக்கு ஐந்து வருஷம் டேபுடேஷ்ன்ல போயிருக்கா "அப்போ பேரப் பசங்க ?

பேரன் டெல்லில ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறான் .பேத்தி இப்ப சிங்கபபூர்ல படிக்கிற சின்னக் குழந்தைங்கள்ளல இருந்தே ஹஸ்டல்தான் டிஸிப்ளிண்ட வரணும் . இல்லையா?
ஓ ..அப்ப நீங்க  மட்டும்தான் இங்க இருக்கிங்களா?
இல்லை ..நான் பெங்களூரின் எல்லையில் உள்ள ஒரு ஹோமில் இருக்கிறேன் அந்த முதியோர் இல்லத்தை நடத்துவதே நான் தான் !அதனால் எனக்கு அந்த வேலைகளே சரியாக இருக்கும் !''
அப்போ இவ்ளோ பெரிய வீட்டை சும்மாதான் போட்டு   வெச்சுருக்கிங்களா ?

இல்லை ..ஜிக்கியும் விக்கியும் இருக்காங்களளே !"

யார் அது ?இதோ இந்த பெர்ஷியன் 'கேட்' ஸ்தான்!"

சமையல்காரம்மாளின்  பின்னாலிருந்து அந்தப் பூனைகள் குடு குடு என ரீ என்ட்ரி தந்தன !"இவை வெளிநாட்டுப் பூனைகள்..என்மருமகளுக்கு என்மகன் பரிசளித்தவை .விமானத்தில் தனி பணம் கட்டி அனுப்பி வைத்தான் .ஒவ்வொரு பூனையும் நாற்பதாயிரம் ரூபாய் !"
ஓ !"இதுகளுக்கு வெயில் தூசு ஒத்துக்காது அதனால் எப்பவும் ஏ ,ஸி ரூம்ல வெச்சுருக்கணும்"
ஓ!
நம்ம ஊரு பால் மீன் எல்லாம் சாப்பிடாது..மினரல் வாட்டர்,  டின்ட் பிஷ்,இம்போர்ட்டட் மில்க் தான் சாப்பிடும்
ஓ !
இதுகளுக்கு ஸ் பா 'கொடுக்க ,தனி ஆள் வெச்சுருக்கு.

ஸ்..அப்பா!"

சர்வ சுதந்திரமாக வளம் வந்த பூனைகளை ,மரியாதை கலந்த பொய் நேசத்துடன் சமயைல்காரம் மாள் ,சீராட்ட வனஜா பெருமையான  பார்வையில் ரசித்தார் .

   வேலை முடிந்து வெளியே வந்த நான் ஆட்டோ பிடிக்க நின்றிந்தபோது அந்தக் காட்ச்சியைக் கண்டேன் சாக்கடை ஓரமாக ஒரு குடிசை .மேற்கூரை என்று எதுவும் இல்லை தகரசீட்டுகளை வைத்து அவை பரண்துவிடாமலிருக்க
அதன்மீது பெரிய கற்களை வைத்திருந்தார்கள் கதவுக்கு பதிலாககோணித் திரை.வெளியே காற்றுக் கட்டிலில்ஒரு குடும்பம் உட்கார்ந்து டி .வி பார்த்துக் கொண்டிருந்தது .எதோ ஹாஸ்யக் காட்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தனர் .சாக்கடை ஓரமாக ஒரு கிழவன் குளித்துக் கொண்டிருக்க,     
  அவன் வயதான மனைவி அவன் தலைக்கு ஷாம்புபோட்டுக் கொண்டிருந்தாள் .முன்று கல் அடுப்பில் சிவப்பு நிறத்தில் குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது .இளம் பெண் ஒருத்தி பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள் .
  ட்ரவுசர் மட்டுமே அணிந்திருந்த சிறு பயல் ஒருவன் தேன் நிறத்தில்  புஞ்சை யாக இருந்த குட்டிப் புனை ஒன்றை விரட்டி விளையாடிக் கொண்டிருந்தான்.

ஒரு கேள்வி :புஸு புஸு பூனை..இந்த நோஞ்சான் பூனை உண்மையில் எது அதிஷ்டம் செய்தது ?
ஒரு தகவல் ;   
மே -15-உலகக் குடும்ப தினம் 



.அனுஷா நடராஜன்   
.நன்றி மங்கையர் மலர்  

Tuesday, September 11, 2012

8 Most Insane Tourist Attractions - FunOnTheNet

8 Most Insane Tourist Attractions - FunOnTheNet

வெற்றியை நினைத்தே போராடு .கோபத்தை புறந்தள்ளுங்கள் இல்லையேல் கோபம் உங்களை புறந்தள்ளிவிடும். துன்பத்தை அதன்குகையில் சந்திங்கள் ,இன்பத்தை அதன் பிடரியை பிடித்து ஆட்டும் அளவுக்கு உறுதியுடன் இருங்கள்.வசித்து நேசித்தாலும் ,நேசித்து வசித்தாலும்வசிப்பது என்பது மிகவும் அவசியம்.நல்ல நூல் போல் நண்பனும் இல்லை,சுற்றுமும் இல்லை.

Saturday, September 1, 2012

Big Rig & Truck Accidents - FunOnTheNet

Big Rig & Truck Accidents - FunOnTheNetவிபத்தின் விதங்கள் 

வெற்றியை நினைத்தே போராடு .கோபத்தை புறந்தள்ளுங்கள் இல்லையேல் கோபம் உங்களை புறந்தள்ளிவிடும். துன்பத்தை அதன்குகையில் சந்திங்கள் ,இன்பத்தை அதன் பிடரியை பிடித்து ஆட்டும் அளவுக்கு உறுதியுடன் இருங்கள்.வசித்து நேசித்தாலும் ,நேசித்து வசித்தாலும்வசிப்பது என்பது மிகவும் அவசியம்.நல்ல நூல் போல் நண்பனும் இல்லை,சுற்றுமும் இல்லை.

Wednesday, May 30, 2012

           

Wednesday, December 14, 2011

The Real Fact of Mullai Periyar DAM Problem

Sunday, December 11, 2011

கழுத்து அறுபட்டும் அதிசய சேவல்



வெற்றியை நினைத்தே போராடு .கோபத்தை புறந்தள்ளுங்கள் இல்லையேல் கோபம் உங்களை புறந்தள்ளிவிடும். துன்பத்தை அதன்குகையில் சந்திங்கள் ,இன்பத்தை அதன் பிடரியை பிடித்து ஆட்டும் அளவுக்கு உறுதியுடன் இருங்கள்.வசித்து நேசித்தாலும் ,நேசித்து வசித்தாலும்வசிப்பது என்பது மிகவும் அவசியம்.நல்ல நூல் போல் நண்பனும் இல்லை,சுற்றுமும் இல்லை.