Monday, March 7, 2011

தன்னம்பிக்கையின் உதாரண புருஷனை வாழ்த்துவோம்

குளுமையன் தென்றல் கற்று வருடிகொன்ன்டு செல்லும் கடற்கரை.கடலும் வானும் உரசும் இடத்தில்.சிறிய கரும் புள்ளியாக தெரிந்ததது வர வர பெரிதாகி,
ஒரு படகும் அதில் மனிதனும் தெரிகிறார்கள்.கரை வந்து விட படகை மிகவும் சிரமத்துடன் இழுத்து வருகிறான்.இருபத்தியந்து வயது மதிக்க தக்க உருவம்,
சிறிய கண்கள் எடுபான நாசி,அளவானா உதடுகள்,சிறிய தாடி,வெள்ளாவியில் வச்சு வெளுத்தாங்களா என்றுசொல்லமுடியாவிட்டாலும்,கருப்பு இல்லை மாநிறத்துக்கும் சற்று கூடுதல் நிறம்,திடகாத்திரமான உடல் ஐந்து அடிக்கு சற்று குறைவுவான உயரம், மொத்தத்தில் அவலச்சணம் இல்லாத உடல் வாகு இவளவு இருந்தும் கை கால் மட்டும் குழந்தைகள் கை கால் போன்று சிறிதாக சூம்பிபோயிஇருக்கிறது.
        
   இவன் யார் இவனை இவளவுதூரம்எழுதவேண்டிய அவசியம் என்ன என்ற உங்கள் மனதில் எழுகிறது எனுக்கும் புரிகிறது,யானையின் பலம் எதிலே
தும்ப்பிகையிலே; மனிதனின் பலம் எதிலே நம்பிகையிலே ;என்று சொல்வது போல் ,இவன் தன்னம்பிகைக்கு பாத்திரமானவன்,இவன்துத்க்குடிமாவட்டம் விளாத்திகுளத்தில் மீனவ குடும்பத்தில் பிறந்தவன்,இவன் பெயர் மரியசிங் 
இவனை போலவே ஒரு தங்கை அவளும் மற்று திறனளி,மனைவி என்றசிறிய 
குடும்பம் தான் என்றாலும் குடும்பதில் தனை தவிர சம்பாரிக்கவேறு இல்லாத 
நிலை.அவனுடைய பெற்றோர் இருக்கும் வரை நல்ல படியாக கழிந்த காலம் 
பெற்றோருக்கு பின் சிரமப்பட ஆரம்பித்தது,சம்பாரிக்க என்னசெயிவது என்ற
நிலையில்
சக மீனவர்கள் உன்னால் முடியாது என்று,தங்களுடன் மீன் பிடிக்க அழைத்து செல்லவில்லை.அந்த நிலை இலும் மனதை தளரவிடாமல்.அப்படி இப்படியாக ஒரு ஆயிந்தாயரும் தயார் செய்து அதை கொண்டு தர்மொகோல் அட்டைகளை 
வாங்கி அதை வைத்து ஒரு சிறய படகு செய ஆரம்பித்தான். இவன்செயிவதை பார்த்து எல்லினகையடினார்கள் அதை பொருட்படுத்தாமல் மன தையரியத்தை வரவழைத்துகொண்டு செய்து முடித்து அந்த படகில் சென்று மீன் பிடித்து அதை விற்று இன்று தினமும் முன்னோர் ருபைகள் வருமானத்தில் தனது குடும்பத்தை நடத்திக்கொண்டு இருக்கிறன் இந்த உழைப்பாளியை வாழ்த்தா வேண்டாமா?இவான் அதைரியபட்டு இருந்தால்,மற்றவர்கள் சொல்லியது போல்,கிலிந்தா மீன் வலையை தைத்து கொடுத்து. வரும் நாற்ப்பது ருபாய் வருமானத்தில்தான் இருந்திருக்க வேண்டும். தன்விடாமுர்ச்சியல் இன்று முன்னூறு ருபாய் வருமானத்தில் இருக்கும் இந்த இளைஞன் இன்னும் மோட்டார்  பாடகுகளை வாங்கும் அளவுக்கு முன்னுக்குவரவேண்டும.
வருவான் இந்தமாதிரி தன்னம்பிக்கையின் உதாரண புருஷனாக விளங்கும் இந்த இளைங்கனை வாழ்த்தாவேண்டியது நமது கடமை.வாழ்த்துவோம். 
நன்றி புதியதலைமுறைக்கு     
                   

No comments: