Tuesday, March 8, 2011

ஆரசு சின்னம் உள்ள ஊர் புறக்கணிக்கக படுகிறது விடிவு கிடைக்குமாஉங்களின் மேலான கருத்துக்களை எதிர் பார்கிறேன்,

ஸ்ரீ ஆண்டாள் பிறந்த புண்ணிய ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர்.பல ஊர்களில் பலநாடுகளில் இருந்து நிறைய யாத்திரிகர்கள் வந்து போகும் ஒரு சுற்றுலா ஸ்தலம்.அது மட்டும் அல்ல,ஸ்ரீ ஆண்டாள் கோவில் கோபுரம் தான் தமிழக அரசின் முத்திரை சின்னமாகும்,மேலும் இந்த ஊர் தாலுகாவின் தலை நகர்.இந்த ஊரின் ஜனத்தொகை கிட்ட தட்ட ஒரு இலச்சத்திற்கும் மேல் இந்தஊரில் தாலுகா அலுவலகம் மற்றும் நீதிமன்ற வளாகம் மற்றும் பலதரப்பட்ட அலுவலகமும் இங்கு உள்ளது மேலும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் வடபத்தர்சாயி,வைத்தீஸ்வரன் ஸ்ரீ நிவாஷபெருமல் காட்டு அழகர் கோயில்கள் நிறைந்துள்ள நகரம் இப்படி பட்ட ஊரில்,அரசு சின்னம் உள்ள ஊர் பேருந்து நிலையத்திற்குள் அரசுபேருந்து வருவதில்லை எவல்வு வருத்தமானா நிகழ்வு,இதுமட்டும் அல்ல இந்தஊரில் இருந்து தொலைதூர ஊர்களான சென்னை,கோவை பெங்களூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் விரைவு பேருந்து முன்பதிவு கவுண்டர் இல்லை இங்கிருந்து பல பையனிகள் இங்கிருந்து ராஜபாளையம் சென்று,முன்பதிவு செய்யவேண்டும் ,அதபோல் பேருந்தில் ஏறுவதற்கு திரும்பவும் ராஜபாளையம் சென்று ஏறவேண்டும் ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக செல்லும் இந்த பேருந்தில் ஏறுவதற்கும் ராஜபாளையம் செல்லவேண்டும் இந்த ஊறி போர்டிங் கூட கிடையாது என்பபது இவளவு வேதனை.எடுத்ததற்கெல்லாம் கொடிபிடிக்கும் செங்கொடியாளர்கள் கூட இதற்க்கு ஒன்றும் செய்யவில்லை.இந்தஊர் எம்லேMLA செங்கொடி காரர் இருந்தும் இந்த அவலநிலை.இதை ஆட்சியாளர்க கவனிப்பார்கள?இந்தஊர் பயநிகளின்துயர் தீரும்மா?எப்போது விடிவு என்று ஏங்குகிறார்கள் அரசு சின்னம்உள்ள ஊருக்கு இந்த பாராமுகம் ஏன்?எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். வாழ்க வளமுடன் 

No comments: